1992ல் நாளை தீர்ப்பு படத்தில் அறிமுகமானவர் விஜய். அதேபோல் விக்ரம் 1990ல் என் காதல் கண்மணி என்ற படத்தில் அறிமுகமானவர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வித்தியாசத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர்கள் இருவரும் திரைக்குபின்னால் ரொம்ப நல்ல நண்பர்களாம். ஒருவர் நடித்த படத்தை இன்னொருவர் பார்த்து விட்டு உடனே நிறை,குறைகளை மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கிடையே துளியும் ஈகோ இல்லாத நட்பு உள்ளதாம்.
இதுபற்றி விஜய் கூறுகையில், விக்ரம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான கெட்டப்பில் நடிக்கிறார். அதனால் அவரது ஒவ்வொரு படத்தையும் நானும் ஒரு ரசிகனாக ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். அவரது உழைப்பு ரொம்ப அசாத்தியமானது. அதிலும் ஐ படத்தில் இதுவரை நடித்ததையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பின்னி எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அதனால் அந்த படம் எனது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
மேலும், விக்ரமை நான் கென்னி என்றுதான் அழைப்பேன். அவர் குடும்பத்துடன் என் வீட்டிற்கு வருவார்,. நானும் எனது குடும்பத்துடன் அவர் வீட்டிற்கு செல்வேன. அப்போது சினிமாவுக்கு அப்பாற்பட்டு நிறைய விசயங்களை பேசிக்கொள்வோம். அப்போதெல்லாம் ரொம்ப ஜாலியாக பேசுவார். கலகலப்பாக இருப்பார். டைரக்டர் ஷங்கரை எப்படி பிரமிப்புடன் பார்க்கிறேனோ அதேபோல் விக்ரமையும் பிரமிப்பாக பார்க்கிறேன் என்கிறார் விஜய்
No comments:
Post a Comment