www.cineithal.com


Breaking News

Friday, October 30, 2015

இணையத்தை கலக்கி வரும் நடிகை கஸ்தூரியின் அரை நிர்வாண படங்கள்

நடிகை கஸ்தூரி தனது அரைநிர்வாண படங்களை வெளியிட்டிருக்கிறார்.  ஒரு குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு கஸ்தூரி நிற்பது போல இந்தப் புகைப்படங்கள் உள்ளன.

சென்னையின் மிஸ் மெட்ராஸாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பின், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
 
அதன்பின், திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் ஒரு குழந்தையுடன் கஸ்தூரி டாப்லெஸ் தோற்றத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள், இப்போது வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
ஒரு வருடத்திற்கு முன்னாள், ’எ பியூட்டிஃபுல் பாடி ப்ராஜெக்ட்’ என்ற திட்டத்திற்காகத்தான் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜேட் பியால் என்பவர் கர்ப்பக் காலம் மற்றும் குழந்தை பெற்ற பின்னர், பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறார். புத்தகமாகவும் வெளியிட இருக்கிறார்.
 
தாய்மை, முதுமை, எடைக் குறைவு, புற்றுநோய், கருச்சிதைவு மற்றும் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விளக்கங்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

இந்தப் புத்தகத்தின் மூலம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே கஸ்தூரி தனது அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.





No comments:

Post a Comment

Designed By Blogger Templates